Also Watch
Read this
By: Web Team

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே தங்களது வார்டுகளுக்கு எந்தவொரு திட்டங்களும் செய்யவில்லை என குற்றம்சாட்டி, பேரூராட்சி கூட்டத்தில் இருந்து பெண் கவுன்சிலர்கள் 2 பேர் வெளிநடப்பு செய்தனர். அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ள நிலையில், 14 மற்றும் 15-ஆவது வார்டுகளை தலைவர் ராஜேந்திரன் புறக்கணிப்பதாக கவுன்சிலர்கள் வேல்மணி, காயத்ரி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். மேலும், மஸ்தூர் வேலைவாய்ப்பிலும் அனுமந்தன்பட்டியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே முன்னிரிமை அளிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved