Also Watch
Read this
By: Web Team

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வீட்டு வரி, தண்ணீர் வரி உள்ளிட்டவற்றை செலுத்துவதற்கு கியூ ஆர் கோடு கார்டு தருவதாக கூறி பணம் வசூலித்த இரண்டு பெண்களை ஊர்மக்கள் சிறை பிடித்தனர். அஞ்சுகோட்டை ஊராட்சிக்குட்பட்ட கரையக்கோட்டை கிராமத்திற்கு வந்த இரு பெண்கள் 60 ரூபாய் பெற்றுக் கொண்டு அட்டையை கொடுத்த நிலையில், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தொடர்பு கொண்ட போது, எந்த உத்தரவும் வழங்கவில்லை என தெரிவித்துள்ளார். இதனையடுத்து அஞ்சுகோட்டை ஊராட்சி செயலர் வரவழைக்கப்பட்டு, பெண்களிடம் இருந்து பணம் திரும்ப பெறப்பட்டது
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved