Also Watch
Read this
By: Web Team

கிறிஸ்துமஸ் இரவில் சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களை மடக்கி பிடித்த போலீசார், 15 பைக்குகளையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி சென்னையில் இரவு முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அண்ணா சாலையில் நள்ளிரவில் அதிவேகமாக சென்று பைக் சாகசத்தில் ஈடுபட்ட 5 இளைஞர்களை, விரட்டிச் சென்ற அண்ணாசாலை போலீசார் ஸ்பென்சர் சிக்னல் அருகே மடக்கி பிடித்தனர். அதே போல் தியாகராய நகர் பகுதியிலும் அதிவேகமாக பைக் ஓட்டிய இளைஞர்களை பிடித்து, மாம்பலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved