Also Watch
Read this
By: Web Team

கோவா நைட் கிளப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சுற்றுலாப் பயணிகள் உட்பட 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வடக்கு கோவாவின் அர்போராவில் உள்ள பிரபலமான பிர்ச் பை ரோமியோ லென் ((Birch by Romeo Lane))கிளப்பில் நள்ளிரவு 1 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்த போது திடீரென புகை பரவியதில், அங்கிருந்தவர்கள் தப்பிக்க முடியாமல் உள்ளே சிக்கி கொண்டனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் காயமடைந்த 50 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி, தீயில் கருகி உயிரிழந்த 25 பேரின் உடல்களை மீட்டனர். 4 சுற்றுலா பயணிகள், 21 ஊழியர்கள் விபத்தில் உயிரிழந்ததாக தெரிவித்த காவல்துறையினர் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved