Also Watch
Read this
By: Web Team

விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள பீகாரில், பெண் வாக்குகளை திரட்டி ஆட்சியை தக்கவைக்க நினைக்கும் திட்டத்துடன், அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 35 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதாக முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
அரசின் அனைத்து பணி நியமனங்கள் மற்றும் பதவிகளில் பெண்களுக்கு 35 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் முடிவுக்கு அவரது தலைமையிலான கேபினட் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
பீகாரை பூர்வீகமாக கொண்ட பெண்களுக்கு மட்டுமே இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved