Also Watch
Read this
By: Web Team

அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிக்க வகைசெய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, 'இந்தியாவில் முதலீடு செய்வதற்கும், புதுமைகளைப் படைப்பதற்கும், கட்டமைப்பதற்கும் இதுவே மிகச் சரியான நேரம், எனத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அணுசக்தி மசோதா நிறைவேற்றப்பட்டு இருப்பது நமது தொழில்நுட்பத்துறைக்கு ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் தருணம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved