Also Watch
Read this
By: Web Team

ராஜஸ்தான் மாநிலம் பலோத்ராவில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி தீ பிடித்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர். சிந்தாரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட சதா கிராமத்திற்கு அருகில் அதிகாலை காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்தது. தகவலறிந்து வந்த போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு விசாரணை செய்ததில், அவர்கள் வேலைக்காக சிந்தாரி சென்று விட்டு வீடு திரும்பியது தெரியவந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved