Also Watch
Read this
By: Web Team

அனைத்து ரயில்வே கேட் மற்றும் கேட் கீப்பர் அறைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலூர் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தை அடுத்து, ரயில்வே கேட் மேலாண்மை குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி ரயில்வே கேட் கீப்பர், ஸ்டேஷன் மாஸ்டர்களின் குரல் பதிவுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், கூடுமானவரை அனைத்து இடங்களிலும் இன்டர் லாக் பொருத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ள ரயில்வே துறை, அனைத்து ரயில்வே கேட்டுகளையும் 15 நாட்களுக்குள் ஆய்வு செய்ய பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்படும் என கூறியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved