Also Watch
Read this
By: Manigandan Raja

இந்தியா சார்பில் 20 டன் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கொலம்பியா நாட்டிற்கு, மீட்பு மற்றும் மறுவாழ்வு பணிகளை மேற்கொள்ள இந்தியா சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, உயிர் காக்கும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், தற்காலிக கூடாரப் பொருட்கள், சுகாதாரப் பாதுகாப்புப் பொருட்கள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பில் கேட்கப்படும் 40 கேள்விகள்
மக்கள் தொகை கணக்கெடுப்பில், 2-ஆம் கட்டப் பணிகளின் போது கேட்கப்படும் 40 கேள்விகளை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பெயர், பிறந்த தேதி, பிறப்பிடம், சாதி, மதம், தாய்மொழி, கல்வித்தகுதி, வேலைவாய்ப்பு, வசதிகள் என 40 வகையான கேள்விகளை மத்திய உள்துறை அமைச்சகம் பட்டிலிட்டுள்ளது.

ராகுலின் பேச்சு அநாகரிகம், ஆணவம் நிறைந்தது
பிரதமர் குறித்து ராகுல் காந்தி பேசியதற்கு பாஜக எம்.பி. அனுராக் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார். ராகுலின் பேச்சு அநாகரிகமாகவும், ஆணவம் நிறைந்ததாகவும் இருப்பதாக விமர்சித்துள்ள அவர், இது காங்கிரஸ் கட்சியின் மனநிலையை வெளிப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

மக்களால் ராகுல்காந்தி 3 முறை நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அவதூறு பரப்பும் செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved