Also Watch
Read this
By: Web Team

வட மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை இதுவரை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் கண்டிக்காமல் கள்ளமவுனம் சாதிப்பது வெட்கக்கேடானது என்று சீமான் தெரிவித்துள்ளார். மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், சிறுபான்மையினர், பழங்குடிகள் என சமூகத்தின் விளிம்பு நிலை மக்கள் தாக்கப்படுவதும், அச்சுறுத்தலுக்கு ஆளாகுவதும் தொடர்கதையாகி விட்டதாக தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கிறித்தவர்கள் மீது நடத்தப்படும் மதவெறித் தாக்குதல்களை அம்மாநில அரசுகள் உடனடியாக தடுத்து நிறுத்தவும், மத்தியில் ஆளும் பாஜக அரசு அதனை உறுதி செய்ய வேண்டும் எனவும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved