Also Watch
Read this
By: Web Team

சூதாட்ட செயலிகளை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் நடித்ததற்காக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இதனை ஏற்று சுரேஷ் ரெய்னா நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைனில் பல்வேறு சூதாட்ட செயலிகள் மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பதாக புகார் எழுந்தது.
அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதில், பிரபல நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் இந்த சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதால்தான் பலர் மோசடி வலையில் சிக்கியது தெரியவந்தது. இதையடுத்து 25 நடிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved