Also Watch
Read this
Posted on: Mar 15, 2026 12:35 PM
By: Admin News Tamil

பதற்றத்தை ஏற்படுத்தியதாக வழக்கு :
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காலநிலை செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.
ஒன்றிய ஆட்சி பிரதேசமான லடாக்கின் பதற்றமான எல்லைப் பகுதியில் இளைஞர்களிடம் பதற்றத்தை உருவாக்கினார் என்ற குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு மார்ச் 17 ஆம் தேதி சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதை எதிர்த்து அவரது மனைவி கீதாஞ்சலி அங்க்மோ உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் மீதான விசாரணையில், வாங்சுக்கின் நடவடிக்கையால் நேபாளம் மற்றும் வங்கதேசம் போன்ற கிளர்ச்சி இந்தியாவில் ஏற்படும் என மத்திய அரசு வாதாடியது.
இந்த நிலையில் அவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டதை ரத்து செய்வதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளதால் அவர் விரைவில் விடுதலையாவார் என தெரிகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved