Also Watch
Read this
By: Manigandan Raja

பனிப்பாறை சரிவுக்கு புவி வெப்பமயமாதலே காரணம்
சீன - நேபாள எல்லையில் கடந்த மாதம் 26ம் தேதி நிகழ்ந்த கொடூரமான பனிப்பாறை சரிவுக்கு புவி வெப்பமயமாதலே காரணம் என சீன ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 60 ஆண்டுகளில் திபெத் பீடபூமியின் பனிப்பாறை பரப்பளவு 51,000 சதுர கிலோ மீட்டரிலிருந்து 39,000 சதுர கிலோ மீட்டராகக் குறைந்துள்ளதாகவும், அங்கு உருவாகியுள்ள பல்லாயிரக்கணக்கான ஏரிகளால் பேரழிவு தரும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஃபார்முலா ஒன் முன்னாள் தலைவர் கைது
ஃபார்முலா ஒன் முன்னாள் தலைவர் பெர்னி எக்ளெஸ்டோன், துப்பாக்கியுடன் போர்ச்சுகல் விமான நிலையம் சென்றபோது அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். துப்பாக்கிகான ஆவணங்கள் இல்லாததால் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

களிமண் தட்டுகளை சுடும் போட்டியில் பங்கேற்கவே துப்பாக்கியை எடுத்து வந்ததாக எக்ளெஸ்டோன் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல்
சவூதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட மக்கள் 73 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குடியிருப்பு மற்றும் பொருளாதார உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து அபா ((Abha)) கமிஸ் முஷைத் ((Khamis Mushait)) ஜசான் ((Jazan)) மற்றும் நஜ்ரான் ((Najran)) ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளதாக சவுதி தலைமையிலான கூட்டுப்படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஏமன் சிறைச்சாலை மீதான வான்வழித் தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக சவூதி மீது தாக்குதலை நடத்தியதாக ஹவுதி தரப்பு கூறியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved