Also Watch
Read this
By: Web Team

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதன் எதிரொலியாக சென்னையிலிருந்து லண்டனுக்கு சென்ற விமானம் பாதியிலேயே திரும்பியது.
சென்னையிலிருந்து லண்டனுக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் 209 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.
ஆனால் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கு நாடுகளின் வான் எல்லை மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னைக்கே விமானம் திரும்பி பயணிகள் ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர்.
வான் எல்லை திறக்கப்பட்ட பின் லண்டனுக்கு விமானம் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved