news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews Gen Z இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு
tv

Also Watch

Gen Z இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு

நீட் வினாத்தாள் கசிவு

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தர்மேந்திர பிரதான்

மௌனம் கலைத்த தர்மேந்திர பிரதான் 

டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த நீட் போராட்டங்களின்போது 'Gen Z இளைஞர்களை சிலர் தவறாக வழிநடத்தியதாக முன்னாள் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம்சாட்டியுள்ளார். நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நடைபெற்ற மாணவர் போராட்டங்களுக்கு மத்தியில் பதவி விலகியவர், இரண்டு வாரங்களுக்குப் பிறகு மௌனம் கலைத்துள்ளார்.

புவனேஸ்வரில் உள்ள ஜிஎம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதான், அமைச்சர் பதவி தனக்கு ஒருபோதும் முக்கியமில்லை என்றும், பிரதமர் மோடியிடம் தனது பதவி விலகல் விருப்பத்தை முன்னரே தெரிவித்ததாகவும் கூறினார்.

ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் அவரது கட்சியினர் திட்டமிட்டு தனக்கு எதிராக இளைஞர்களைத் தூண்டிவிட்டு, போராட்டங்களை நடத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

டெல்லியில் பல இடங்களில் தீவிரவாத எதிர்ப்பு கூட்டுப் பயிற்சி

சுதந்திர தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, காவல்துறை மற்றும் தேசிய பாதுகாப்புப் படை இணைந்து டெல்லியில் பல இடங்களில் தீவிரவாத எதிர்ப்பு கூட்டுப் பயிற்சியை நடத்தின.

காஷ்மீரி கேட், கன்னாட் பிளேஸ், நேரு பிளேஸ், IGI விமான நிலையம், செங்கோட்டை மெட்ரோ நிலையம் மற்றும் கல்காஜி மந்திர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இந்த ஒத்திகை நடத்தப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேற்பார்வையின் கீழ் நடந்த இந்த ஒத்திகையில் குண்டுவெடிப்பு, துப்பாக்கிச் சூடு மற்றும் பணயக் கைதிகள் மீட்பு போன்ற பல்வேறு அவசரச் சூழல்கள் சோதிக்கப்பட்டன.

ஏர் இந்தியா விமானம் நடுவானில் கடுமையான குலுங்கலுக்குள்ளான விமானம்

நடுவானில் கடுமையான குலுங்கலுக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் முதன்மை விமானி, மருத்துவப் பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. கடந்த 4ஆம் தேதி புக்கெட்டிலிருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானம் நடுவானில் குலுங்கியதில், ஊழியர்கள் உட்பட 17 பேர் காயமடைந்தனர்.

இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநரகம் விசாரணை நடத்தி வருகிறது. விமானம் தரையிறங்கியதும் விமானிக்கு நடத்தப்பட்ட போதைப்பொருள் சோதனையில் அவர் தோல்வியடைந்தார்.

இதையடுத்து விசாரணை முடியும் வரை இரு விமானிகளும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், அதிகாரபூர்வ முடிவுகள் வரும் வரை இது குறித்து கருத்து தெரிவிக்க இயலாது என்று ஏர் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது.

Related Link
ஒன்றிணைகிறதா தேசியவாத காங்கிரஸ் பிரிவுகள்?

ஒன்றிணைகிறதா தேசியவாத காங்கிரஸ் பிரிவுகள்?




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆண்டாள் கோவில் தேரின் அலங்கார துணிகள் சேதம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved