Also Watch
Read this
By: Web Team

மாலத்தீவுகளுடனான உறவுகளை இந்தியா வலுப்படுத்தும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மீண்டும் நிலைநிறுத்தப்படுவதை குறிக்கும் வகையில், சனிக்கிழமை நடைபெற்ற மாலத்தீவு நாட்டின் சுதந்திர தின கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அதன் பிறகு நாடு திரும்பிய அவர், உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், காலநிலை மாற்றம் என பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதாகவும், இது இருநாட்டு மக்களுக்கும் நன்மையை ஏற்படுத்தி வரும் ஆண்டுகளில் இந்த கூட்டாண்மையை ஆழப்படுத்த எதிர்நோக்குவதாகவும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved