Also Watch
Read this
By: Web Team

இணையவழி மோசடி மூலம் மாதந்தோறும் ஆயிரம் கோடி ரூபாயை இந்தியர்கள் இழந்து வருவதாக மத்திய அரசு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
இந்திய இணையவழி குற்ற ஒருங்கிணைப்பு மையம், இணையவழி மோசடி தொடர்பான தகவல்களை திரட்டியது.
இதில், இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களில் 7 ஆயிரம் கோடி அளவுக்கு இணைய வழி மோசடி நடந்துள்ளதாகவும், அதில் பாதிக்கும் மேற்பட்ட தொகை மியான்மர், கம்போடியா, வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அதில் ஜனவரி மாதத்தில் 1,192 கோடி ரூபாயும், பிப்ரவரியில் 951 கோடி ரூபாயும், மார்ச் மாதத்தில் ஆயிரம் கோடி ரூபாயும், ஏப்ரல் மாதத்தில் 731 கோடி ரூபாயும், மே மாதத்தில் 999 கோடி ரூபாயும் மோசடி நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மோசடிகள் பெரும்பாலும் சீன நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved