Also Watch
Read this
By: Manigandan Raja

JPSC உறுப்பினர்கள் ராஜினாமாவுக்கு ஆளுநர் ஒப்புதல்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் JPSC-JSSC தேர்வு முறைகேடுகளை கண்டித்து கடந்த 16 நாட்களாக நடைபெற்ற மாணவர்க் போராட்டத்தின் எதிரொலியாக ஜார்க்கண்ட் பொது சேவை ஆணையத்தின்((JPSC)) 3 உறுப்பினர்களின் ராஜினாமாவுக்கு ஆளுநர் ஒப்பபுதல் அளித்துள்ளார். மேலும் சிஐடி மற்றும் அமலாக்கத்துறை விசாரணைக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சகோதரர்களுக்கு ஜாமீன் கிடைக்க விநோத வழிபாடு
சட்டீஸ்கரில் சிறையில் உள்ள தனது சகோதரர்களுக்கு ஜாமீன் கிடைக்க வேண்டி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் புகைப்படத்தை சுடுகாட்டில் வைத்து மாந்திரீகம் செய்த விசித்திர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தேவ்ரியை சேர்ந்த ரிஷிகேஷ் குமாரின் சகோதரர்கள் இருவர் கத்திக் குத்து சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
கன்வார் யாத்திரையில் அடித்து செல்லப்பட்ட பக்தர்கள்
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கங்கை நீரை தோளில் காவடியாக சுமந்து செல்லும் கன்வர் யாத்திரையின் போது கங்கை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 21 பக்தர்களை மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

கங்ரா காட் பகுதியில் 17 பேர் மீட்கப்பட்டனர். தொடர்ந்து பிரேம்நகர் காட் பகுதியில் மூவரையும், காட் பகுதியில் ஒருவரையும் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved