Also Watch
Read this
By: Web Team

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கணவன் தகராறில் ஈடுபட்டதால் 5 வயது குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு மனைவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்தது.
கே.ஜி லக்கேனஹள்ளி கிராமத்தை சேர்ந்த ஜெயராம் என்பவரும் மகாலட்சுமியும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கணவன் மதுபோதைக்கு அடிமையாகி தினமும் தகராறில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
வழக்கம்போல் சம்பவத்தன்று சண்டையிட்டுக்கொண்டு கணவன் வீட்டை விட்டு சென்றுவிடவே, குழந்தையை மனைவி கொலை செய்து தானும் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் அக்கம்பக்கத்தினர் மீட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved