Also Watch
Read this
By: Web Team

பீகாரில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் திருத்த சிறப்பு நடவடிக்கையை எதிர்த்து தாக்கலான 10 மனுக்களை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.
மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி உள்ளிட்டோர் இன்று நீதிபதிகள் சுதான்ஷு துல்லியா, ஜோமல்யா பாக்சி அமர்வு முன்பாக ஆஜராகி, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையால், கடந்த 20 ஆண்டுகளாக வாக்களித்து வந்த பீகார் மக்கள் தங்கள் வாக்குரிமையை இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக வாதாடினர்.
பீகாரில் எட்டு கோடி வாக்காளர்கள் இருக்கும் நிலையில் அவர்களில் நான்கு கோடி பேரை வெளியேற்ற சதி நடப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஆதார், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை ஏற்க மறுப்பதாகவும் குற்றஞ்சாட்டினர்.
இந்த மனுக்களை வரும் வியாழக்கிழமை விசாரிக்க நீதிபதிகள் ஒப்புதல் வழங்கினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved