Also Watch
Read this
By: Web Team

பீகாரில் முதற்கட்ட தேர்தலுக்கு இன்னும் 30 க்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மாகாகட்பந்தன் கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறியாக நீடிக்கிறது.
மொத்தமுள்ள 243 தொகுதிகளில் தங்களுக்கு 70 தொகுதிகள் வேண்டும் என காங்கிரஸ் பிடிவாதமாக இருந்தாலும், கடந்த தேர்தலில் பெற்ற தோல்வியை மனதில் வைத்து 52 முதல் 55 தொகுதிகளை மட்டுமே தருவதாக ஆர்ஜேடி கூறுவதாக தெரிகிறது.
அதே போன்று மற்றோர் கூட்டணி கட்சியான விகாஷீல் இன்சான் பார்ட்டி 40 முதல் 50 இடங்களை கேட்கிறது. இது போதாது என்று இடது சாரிகளும் கடந்த முறையை விட கூடுதல் தொகுதிகளை கேட்பதால், தொகுதி பங்கீடு இழுபறியாக உள்ளது. இந்த கூட்டணியின் தொகுதி பங்கீடு முடிவாகாத நிலையில் பல முக்கிய தொகுதிகளுக்கு ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved