Also Watch
Read this
By: Web Team

கார்கில் வெற்றி நினைவு தினத்தை ஒட்டி நாட்டுக்கு உயிர்த்தியாகம் செய்த வீர ர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் வீர வணக்கம் செலுத்தி உள்ளனர்.
இது தொடர்பாக தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள திரவுபதி முர்மு, நமது ராணுவத்தினரின் அபரிமிதமான வீரம், உறுதியான நடவடிக்கை ஆகியவற்றை இன்றைய தினம் அடையாளப்படுத்துவதாக புகழாரம் சூட்டியுள்ளார்.
வீர ர்களின் தியாகம் நாட்டு மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய வீர ர்களின் இணையில்லா வீரம் மற்றும் நாட்டின் பெருமையை காக்க அவர்கள் செய்த உயிர்த் தியாகம் ஆகியவற்றை வெற்றி தினம் நினைவுபடுத்துவதாக தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved