Also Watch
Read this
By: Manigandan Raja

அடுத்த 5 ஆண்டுகளில் இரு நாடுகளின் வர்த்தகம் இரட்டிப்பாகும்
அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா-பெல்ஜியம் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு, முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்கள், செமிகண்டக்டர்கள், தூய எரிசக்தி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் சென்ற வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
உக்ரைன் சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ரஷ்யா - உக்ரைன் மோதலை முடிப்பதற்கான அணுகுமுறைகள் குறித்தும், இந்தியா - உக்ரைன் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசித்ததாக அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved