Also Watch
Read this
By: Manigandan Raja

தனது பெயரைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக புகார்
தனது பெயரைத் தவறாகப் பயன்படுத்தியதாக influencer ஒருவர் மீது மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
influencer சுவதந்த்ர பரத்வாஜ் ((Swatantra Bhardwaj))பேட்டி ஒன்றில் டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது மாணவர் ஒருவரின் தந்தையின் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அந்தத் தாக்குதலுக்குப் பிறகும் தான் சிறைக்குச் செல்லாமல் தப்பியதற்கு மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் ஆதரவே காரணம் என வீடியோவில் பேசியிருந்தார்.
பிளேடுகளை விழுங்கிய 16 வயது சிறுவன்
ஹைதராபாத்தில் ரேசர் பிளேடுகளை விழுங்கிய 16 வயது சிறுவனின் வயிற்றில் இருந்து, 3 பிளேடு துண்டுகளை உஸ்மானியா பொது மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.

பிளேடின் கூர்மையான முனைகளால் உள்ளுறுப்புகளில் கீறல்கள் மற்றும் உள்காயங்கள் ஏற்படும் அபாயம் மிக கவனமாக தவிர்க்கப்பட்டு, இரைப்பை - குடல் endoscopy சிகிச்சை மூலம் பிளேடுகள் அகற்றப்பட்டன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved