Also Watch
Read this
By: Web Team

தான் உயிரோடு இருக்கும் வரை மக்களின் வாக்குரிமையை யாரும் பறிக்க அனுமதிக்க மாட்டேன் என மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி சூளுரைத்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், மேற்குவங்க வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்கும் நோக்கத்துடன் மாநிலத்தின் வெளியே இருந்து 500-க்கும் மேற்பட்ட குழுக்களை பாஜக அனுப்பியுள்ளதாகவும், யாராவது உங்கள் வீட்டுக்கு கணக்கெடுப்புக்காக வந்தால், தனிப்பட்ட விவரங்களைப் பகிர வேண்டாம் எனவும் மக்களிடம் கேட்டு கொண்டார்.
மேலும் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உறுதிபடுத்தி கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved