Also Watch
Read this
By: Fyrose Banu

கேரள மாநிலம் பாலக்காட்டில் சாலையில் நடந்து சென்ற சிறுத்தை குறித்தான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. பாலக்காடு மாவட்டத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் வனவிலங்குகள் புகுந்து அச்சுறுத்தும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றனர் இதனால் வனப்பகுதிகளை ஒட்டி வாழும் பொதுமக்கள் அச்சத்தோடு காணப்படுகின்றனர்.
இந்நிலையில் நெல்லியாம்பதி பகுதியில் சிறுத்தை ஒன்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தது சிறிது தூரம் சாலையில் நடந்து சென்ற பின்பு வன பகுதியை நோக்கி சென்றது இதை அந்தச் சாலையில் சென்று கொண்டிருந்த நபர்கள் வீடியோ பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்த நிலையில் அந்த காட்சி வைரல் ஆகி வருகிறது.
பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் நடமாடுவது பொது மக்களுக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved