Also Watch
Read this
By: Web Team

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஏர் இந்தியா அறிவித்த ஒரு கோடி ரூபாய் இழப்பீட்டை பெறுவதற்கான நடைமுறை, கடுமையாக இருப்பதாக பாதிக்கப்பட்டோர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
விண்ணப்பம் முழுமையாக இல்லையெனில் இழப்பீடு இல்லை என விமான நிறுவனத்தால் மிரட்டப்படுவதாகவும், பல்வேறு நிபந்தனைகளை விதித்து இழப்பீட்டு தொகையை வலுக்கட்டாயமாக குறைக்க முயல்வதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதனை மறுத்த ஏர் இந்தியா நிறுவனம், இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் "ஆதாரமற்றவை மற்றும் தவறானவை" என்று தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved