Also Watch
Read this
By: Web Team

கரூர் விவகாரம் தொடர்பாக, சிபிஐ விசாரணை கோரிய வழக்கை திரும்ப பெறுமாறு, மனுதாரர் பிரபாகரனை மிரட்டுவதாக, உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி அன்று தவெக தலைவர் விஜய்-ன் பிரச்சார கூட்டத்தில், நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது குறித்து, சிபிஐ விசாரணை கோரிய பிரபாகரன், உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்து, அதனை அவசர வழக்காக விசாரிக்க கோரியிருந்தார். காவல் துறையினர், உயர் அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் என பல தரப்பிலும் தன்னை மிரட்டுவதாக, பிரபாகரனின் வழக்கறிஞர் தெரிவித்தார். இந்த நிலையில், எந்த அழுத்தம் ஏற்பட்டாலும், சிபிஐ முன்பு முறையிடுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved