news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news மதுராந்தகம், தாராபுரத்திற்கு பொறுப்பாளர்கள் அறிவிப்பு
tv

Also Watch

மதுராந்தகம், தாராபுரத்திற்கு பொறுப்பாளர்கள் அறிவிப்பு

முதல்வர் விஜய் அறிக்கை

29

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பொறுப்பாளர்கள், கண்காணிப்பாளர்கள், இணை- துணை பொறுப்பாளர்கள் என அமைச்சர்களை தவெக தலைவரும் முதல்வருமான விஜய் அறிவித்துள்ளார்.

இடைத்தேர்தலுக்கு தயார்
இதுதொடர்பாக முதல்வரும், தவெக தலைவருமான விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது;
வரும் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ள மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்ள தேர்தல் பணிக் குழுவும், பணிகளைக் கண்காணிக்க, தேர்தல் கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்படுகிறார்கள்.

தேர்தல் கண்காணிப்பாளர்கள்
அமைச்சர் என். ஆனந்த்
அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார்

தேர்தல் பணிக்குழு
மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதி:
பொறுப்பாளர் - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

இணைப் பொறுப்பாளர்கள்

அமைச்சர் பி. ராஜ்குமார்
அமைச்சர் கே. தென்னரசு
அமைச்சர் ஆர். வினோத்

துணைப் பொறுப்பாளர்கள்
சரவணமூர்த்தி எம்.எல்.ஏ - சோழிங்கநல்லூர் சட்டமன்றம்
தியாகராஜன் எம்.எல்.ஏ. - செங்கல்பட்டு சட்டமன்றம்
பி. விஜயராஜ் எம்.எல்.ஏ. - திருப்போரூர் சட்டமன்றம்
ஜே.காமாட்சி எம்.எல்.ஏ - பல்லாவரம் சட்டமன்றம்
எம்.எஸ்.பாலாஜி (எ) மணிகண்டன் - செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர்

தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதி
பொறுப்பாளர் - அமைச்சர் அருண்ராஜ்
இணைப் பொறுப்பாளர்கள்
அமைச்சர் விஜய் பாலாஜி
அமைச்சர் விஜயலட்சுமி
அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்


துணைப் பொறுப்பாளர்கள்
எஸ்.பாலமுருகன் எம்.எல்.ஏ. - திருப்பூர் தெற்கு சட்டமன்றம்
சத்தியபாமா எம்.எல்.ஏ. - திருப்பூர் வடக்கு சட்டமன்றம்
ராம்குமார் எம்.எல்.ஏ. - பல்லடம் சட்டமன்றம்
சி.எஸ். திலீப் எம்.எல்.ஏ. - நாமக்கல் சட்டமன்றம்
சத்யா எம்.எல்.ஏ. - கிருஷ்ணராயபுரம் சட்டமன்றம்

மீண்டும் வாகை சூட வேண்டும்
மேற்கண்ட குழுவினர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்வார்கள். தேர்தல் கண்காணிப்பாளர்கள், இரண்டு தொகுதிகளின் தேர்தல் பணிகளைக் கண்காணிப்பார்கள். அந்தந்தச் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட கட்சியினர் அனைவரும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். வெற்றிச் சின்னமாம் விசில் சின்னம், மீண்டும் வாகை சூட வேண்டும். இடைத்தேர்தல் வரலாற்றிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர் என்கிற புதிய வரலாறு படைக்கும் வகையில் அனைவரும் தேர்தல் பணியாற்றிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இந்தத் தொகுதிகளில் நம் வெற்றி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நமது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விரைவில் முன்னெடுப்போம்.
இவ்வாறு முதல்வரும் தவெக தலைவருமான விஜய் அறிவித்துள்ளார்.

Related Link
தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி, முதல்வர் விஜய் நெகிழ்ச்சி

தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி, முதல்வர் விஜய் நெகிழ்ச்சி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இடைத்தேர்தலுக்கு தடை கோரி வழக்கு

19
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved