Also Watch
Read this
By: Web Team

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று, சாதனை படைத்த பிறகு, முதல்முறையாக சொந்த மண்ணுக்கு வருகை தந்த சுபான்ஷூ சுக்லா(Shubhanshu Shukla) கவுரவிக்கப்பட்டனர்.
உத்தர பிரதேச மாநிலம், லக்னோவைச் சேர்ந்தவர் சுபான்ஷு சுக்லா.
இவர், அமெரிக்காவின் ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றார். அங்கு 14 நாள் தங்கி, ஆய்வு செய்துவிட்டு பூமிக்குத் திரும்பினார்.
இதன்மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். அவர் சில தினங்களுக்கு முன், இந்தியா திரும்பினார்.
இந்நிலையில், இன்று பிறந்த மண்ணான லக்னோவுக்கு சுபான்ஷூ சுக்லா வந்தடைந்தார். அவரை துணை முதல்வர் பிரஜேஷ் பதக், அவரது பெற்றோர் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

மகன் வருகை குறித்து, சுபான்ஷூ சுக்லா தாய் ஆஷா சுக்லா கூறியதாவது:
என் மகன் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு வீடு திரும்பி உள்ளான். இவ்வளவு நீண்ட காலத்திற்குப் பிறகு அவனைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்தேன். அவனை அன்புடன் வரவேற்றேன்.
இவ்வாறு அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved