தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே நடைபெற்ற கோயில் தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னையூர் திருந்தாண்டி ஐயனார், பிடாரியம்மன் மற்றும் சூலப்பிடாரியம்மன் சுவாமிகள் 3 தேர்களில் எழுந்தருள, 8 கரையை சேர்ந்த பொதுமக்கள் முளைப்பாரியுடன் சுவாமிகளை வரவேற்க, இளைஞர்கள் தேரை தோளில் சுமந்தபடி கோவிலை வலம் வந்தனர்.