அமெரிக்க ராணுவம் தாக்குதல் : 24 மணிநேரத்தில் ஈரானின் ஆயிரம் இலக்குகளை ஏஐ- பயன்படுத்தி அமெரிக்க ராணுவம் துல்லியமாக தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க இராணுவம் போர் தொழில்நுட்ப நிறுவனமான Palantir- உடன் இணைந்து ஆந்த்ரோபிக் நிறுவனம் உருவாக்கிய கிளாட் AI-ஐ பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஈரான் மீது தாக்குதல் நடத்திய முதல் 12 மணிநேரத்தில் மட்டும் 900 ஏவுகணைகள் துல்லியமாக ஏவ முடிந்ததாகவும், அப்போது தான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. Related Link துபாய் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது