பாஜகவுடன் கூட்டணி இல்லை என தவெக தலைவர் விஜய் இதுவரை சொல்லவில்லை என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை விருகம்பாக்கத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவை எதிர்க்கும் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.