Also Watch
Read this
By: Web Team

இங்கிலாந்தில் இன்று இரவு நடைபெறவிருந்த ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரின் இந்தியா-பாகிஸ்தான் போட்டி ரத்து செய்யப்பட்டது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
இதனால் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஏற்பாட்டாளர்கள் போட்டியை ரத்து செய்ததோடு, குடிமக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக மன்னிப்பும் கேட்டுள்ளனர்.
போட்டி ரத்து செய்யப்படுவதற்கு முன்னதாகவே ஹர்பஜன் சிங், ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட பல இந்திய வீரர்கள் போட்டியில் இருந்து விலகினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved