Also Watch
Read this
By: Web Team

சிபிஐ, ED, IT, தேர்தல் ஆணையம் என அனைத்து அமைப்புகளையும் திமுகவுக்கு எதிராக பயன்படுத்துவார்கள் என்பதால், எதிரிகளை குறைத்து மதிப்பிடக் கூடாது என்று, திமுக நிர்வாகிகளுக்கு அக்கட்சி தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எச்சரித்தார். என் வாக்குச் சாவடி - வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பில் காணொலி வாயிலாக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர், எத்தனை எதிரிகள் வந்தாலும், எத்தனை அணிகள் செயல்பட்டாலும், தமிழ்நாட்டை மீண்டும் ஆளப்போவது திமுக தான் என உறுதிப்பட கூறினார்.
வெற்றி பெறுவதற்கு சாதகமான சூழ்நிலைகள் இருந்தாலும், எதிரிகளைக் குறைத்து மதிப்பிடக் கூடாது எனத் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரைவு வாக்காளர் பட்டியலில் யாருடைய பெயரும் விடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், இதன் மூலம் 2026 சட்டமன்றத் தேர்தலில் 2 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை திமுக பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved