Also Watch
Read this
By: Manigandan Raja

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இந்திய தயாராக உதவும்
ஜப்பான் அணிக்கு எதிராக முதல்முறையாக டி20 சர்வதேச போட்டியில் விளையாடுவதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு தயாராகும் இந்திய அணிக்கு, இது பயனுள்ளதாக இருக்கும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், ஜப்பானில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் முக்கிய முயற்சியாகவும் இந்த போட்டி பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 22-ம் தேதி ஜப்பானின் சானோ மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் கிழக்கு மண்டல அணியின் கேப்டன் இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி இரட்டை சதம் அடித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில், டாஸ் வென்று முதலில் களமிறங்கிய கிழக்கு மண்டல அணி தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி, 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்ஸில் 708 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

கேப்டன் இஷான் கிஷன் 334 பந்துகளில் 270 ரன்களும், குமார் குஷாக்ரா 101, ஷிகர் மோகன் 85, அபிமன்யு ஈஸ்வரன் 72 ரன்களும் எடுத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved