Also Watch
Read this
By: Manigandan Raja

தென் ஆப்பிரிக்காவில் ஒருநாள் தொடரில் விளையாட திட்டம்
2027 ஒருநாள் உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில், தென் ஆப்பிரிக்காவில் ஒருநாள் தொடரில் விளையாட இந்திய அணி திட்டமிட்டுள்ளது.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 4 முதல் 6 போட்டிகள் கொண்ட தொடரை நடத்துவது குறித்து பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. உலகக்கோப்பைக்கு முன் வீரர்களின் உடற்தகுதியிலும் பிசிசிஐ கவனம் செலுத்தி வருகிறது.
சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர்
சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சத்விக்-சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. காலிறுதியில் டென்மார்க்கின் கிம் அஸ்ட்ரப்- ஆண்டர்ஸ் ராஸ்முசென் ஜோடியை 21-13, 16-21, 21-18 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது.

இந்த பரபரப்பான போட்டியில் வெற்றி பெற்ற இந்திய ஜோடி, தொடர்ந்து 4 ஆவது முறையாக சீனா மாஸ்டர்ஸ் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved