வீடியோ வெளியிட்ட பி.வி.சிந்து : பிரபல இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, பத்திரமாக பெங்களூரு திரும்பிய நிலையில், துபாயில் சிக்கிக் கொண்ட அனுபவம் குறித்து வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்க தாம் இங்கிலாந்து செல்லவிருந்ததாகவும், ஆனால் பிப்ரவரி 28-ம் தேதி துபாயில் தரையிறங்கியபோது போர் தொடங்கியதால் துரதிர்ஷ்டவசமாக விமான நிலையத்தில் சிக்கிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அப்போது மிகவும் மன அழுத்தமாக இருந்ததாகவும், துபாய் விமான நிலையம் அருகே மிகப் பெரிய சத்தம் கேட்டதோடு, புகையாகவும் இருந்ததாக கூறியுள்ளார். Related Link உற்சாகத்தில் பெங்களூரு அணி ரசிகர்கள்