Also Watch
Read this
By: Web Team

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கையை எடுக்குமாறு மத்திய அரசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சருக்கு அவர் எழுதிய கடிதத்தில், இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 14 மீனவர்கள் செவ்வாய்க்கிழமை சிறை பிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த மாதத்தில் மட்டும் இது 4-ஆவது சம்பவம் எனவும், தற்போது வரை 68 மீனவர்களும், 235 மீன்பிடி படகுகளும் இலங்கையின் காவலில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதோடு, இதுபோன்ற கைது நடவடிக்கைகள் மீனவர்களின் குடும்பத்தினரை நெருக்கடிக்கு உள்ளாக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved