Also Watch
Read this
By: Manigandan Raja
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு முதலமைச்சர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், 3 தமிழர்கள் படுகொலையை வன்மையாக கண்டிப்பதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக வனத்துறை கொடுத்த விளக்கம் ஏற்புடையதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக நேர்மையான விசாரணை நடத்தி, தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கர்நாடக அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved