Also Watch
Read this
By: Manigandan Raja

நேபாளத்தில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேபாளத்தில் மீண்டும் புதிய வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சோச்சென் கோலா மற்றும் புரேபு சாங்போ ஆறுகள் சங்கமிக்கும் இடத்திற்கு அருகே உருவாகியுள்ள புதிய ஏரியில் நீர்மட்டம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், நேபாளத்தின் திரிசூலி பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் காலமானார்
நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் தனது 89 வயதில் காலமானார். ரத்தத்தில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டதன் காரணமாக கடந்த 17ஆம் தேதி ஐந்தாம் ஹரால்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது உடல்நிலை மோசமடைந்து கொண்டே வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறப்பு நார்வே மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் கண்ணி வெடிகள் அகற்றம்
ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினரால் வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகளை அமெரிக்கப் படைகள் அகற்றியுள்ளனர். அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், சர்வதேசக் கப்பல் பாதைகள் பாதுகாப்பாகத் திறக்கப்பட்டுள்ளதாகவும், வணிகக் கப்பல்களின் போக்குவரத்து மீண்டும் வேகம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved