Also Watch
Read this
By: Manigandan Raja

Google DeepMind நிறுவன AI பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை
AI தொழில்நுட்பத்தின் ஆபத்துகளை சுட்டிக்காட்டி Anthropic நிறுவன ஆராய்ச்சியாளர் ஜேக்கப் காக்சன் பணியிலிருந்து விலகிய சில நாட்களில், Google DeepMind நிறுவனத்தில் பணியாற்றிய AI பாதுகாப்பு ஆராய்ச்சியாளரும் அதே போன்ற எச்சரிக்கையை விடுத்து, பணியில் இருந்து விலகியுள்ளார்.
தற்போது AI மதிப்பீட்டு அமைப்பான METR-ல் இணைந்துள்ள Josh Engels, அடுத்த 5 ஆண்டுகளில் AI மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளார்.
71ஆவது பிறந்தநாளை கொண்டாடிய போப் லியோ
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் லியோ தனது 71வது பிறந்தநாளை, வாடிகன் நூலகத்தில் கேக் வெட்டி கொண்டாடினார். தனது பிறந்தநாளை ஒட்டி வாடிகன் ஊழியர்களுக்கு சிறப்பு பரிசளிக்கும் வகையில்.

கொரோனா காலத்தில் விதிக்கப்பட்டிருந்த சம்பள குறைப்புகளை ரத்து செய்வதாக அறிவித்த போப், வாடிகன் ரகசிய காப்பகம் மற்றும் நூலக ஆவணங்களை நகருக்கு வெளியே மாற்றும் முந்தைய திட்டத்தையும் ரத்து செய்தார்.
ஒரே மின்னஞ்சலில் ஊழியர்களை பணிநீக்கம் செய்த ஆரக்கிள்
முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள், இன்றே கடைசி வேலை நாள் என ஒற்றை மின்னஞ்சலை அனுப்பி, தனது ஊழியர்களில் கணிசமானவர்களை பணிநீக்கம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திங்கட்கிழமை அதிகாலை 6 மணிக்கு பணிநீக்கம் தொடர்பான மின்னஞ்சல் வந்த நிலையில், அடுத்த சில நிமிடங்களிலேயே ஊழியர்களின் அலுவலக மின்னஞ்சல், லாகின், ஆவணங்கள் அணுகல் உள்ளிட்ட அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊழியர்கள் தங்கள் இழப்பீட்டுத் தொகை குறித்த விவரங்களை பெற தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளை பதிவிட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved