Also Watch
Read this
By: Manigandan Raja

உக்ரைனும், ரஷ்யாவும் ஒப்புக்கொண்டுள்ளதாக டிரம்ப் தகவல்
எரிசக்தி கட்டமைப்புகள் மீது ஒருவருக்கொருவர் தாக்குதல் நடத்த மாட்டோம் என ரஷ்யாவும், உக்ரைனும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், உலகளாவிய எரிபொருள் விலை உயர்வுக்கு மத்திய கிழக்கு போர் காரணமில்லை எனவும்.
ரஷ்யா - உக்ரைன் போரே காரணம் எனவும் தெரிவித்துள்ளார். இதனிடையே, உக்ரைனுக்கான ஆதரவை நேட்டோ அதிகரிக்கும் என அந்த அமைப்பின் தலைவர் மார்க் ரூட்டே கூறியுள்ளார். உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கை ஓங்குகிறது
ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், தெற்கு செங்கடல் பகுதியில் மேலும் இரு முக்கிய தீவுகளை கைப்பற்றியுள்ளனர். ‘பாப் அல் மாண்டேப்’ ஜலசந்தியை சுற்றியுள்ள பகுதிகளில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தி, முக்கிய துறைமுக நகரமான மோச்சாவையும், பெரீம் மற்றும் ஜுகர் தீவுகளையும் கைப்பற்றினர்.

இந்த சூழலில், கிரேட்டர் ஹனிஷ் மற்றும் லெஸ்ஸர் ஹனிஷ் ஆகிய 2 தீவுகளையும் தற்போது கைப்பற்றியுள்ளனர். இதன் மூலம், ஏமனின் செங்கடல் கடற்கரை பகுதி மற்றும் சுற்றியுள்ள தீவுகள் முழுவதும் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved