Also Watch
Read this
By: Manigandan Raja

புத்தக வாசிப்பிற்கு புதிய முன்னெடுப்பு
சிங்கப்பூரில் தினமும் 15 நிமிடங்கள் புத்தகங்களை வாசிப்பவர்களுக்கு பணப்பரிசு வழங்கி அந்நாட்டு தேசிய நூலகம் ஊக்குவித்து வருகிறது. Doom scrolling மற்றும் டிஜிட்டல் அடிமைத்தனத்தில் இருந்து மக்களை மீட்க இந்த முயற்சியில் தேசிய நூலகம் இறங்கியுள்ளது. மக்கள் அவர்களின் இடத்தில் இருந்தபடியே ஆன்லைன் வழியாகவும் புத்தங்களை படிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிடம் பேச்சுவார்த்தை நிபந்தனைகள்
போரை முடிவுக்கு கொண்டு வந்து மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கான நிபந்தனைகளை கத்தார் மூலம் அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

அனைத்து முனைகளிலும் போர் நிறுத்தம், முடக்கப்பட்ட ஈரான் நிதியை விடுவித்தல், அமெரிக்க கடற்படை முற்றுகையை முடிவுக்கு கொண்டு வருதல் ஆகியவை நிபந்தனைகள் என ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாயி தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved