Also Watch
Read this
By: Manigandan Raja

இந்தியாவில் சிறுபான்மையினர் தாக்கப்படுவதாக பாகிஸ்தான் முன்வைத்த குற்றச்சாட்டை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நடந்ததாகவும், இஸ்லாமியர்களை குறிவைத்து அவர்களின் குடியிருப்புகள் தகர்க்கப்படுவதாகவும் பாகிஸ்தான் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் தாஹிர் அந்த்ராபி ((Tahir Andrabi)) கடுமையான விமர்சனங்களை சுமத்தியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, பாகிஸ்தானில் வெவ்வேறு மத நம்பிக்கைகளை சார்ந்த சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டு வருவது நிரூபிக்கப்பட்ட உண்மை என்பதால் அப்படிப்பட்ட நாட்டில் இருந்து வரும் கருத்துகள் அடிப்படை ஆதாரமற்றவை என தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved