Also Watch
Read this
By: Web Team

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து நடப்பதற்கு நான்கு வாரங்கள் முன்னரே, போயிங் டிரீம்லைனர் விமானங்களின் எரிபொருள் சுவிட்சுகளை சோதிக்க வேண்டும் என பிரிட்டனின்சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அங்குள்ள விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக அந்த ஆணையம் வெளியிட்ட அறிவுறுத்தலில், போயிங் 787 உள்ளிட்ட ஐந்து மாடல்களில் உள்ள எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் பற்றி அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாகம் அளித்துள்ள பரிந்துரைகளை அமல்படுத்துமாறு கேட்டுக் கொண்டது.
போயிங் விமானங்களின் எரிபொருள் சுவிட்சுகள் பாதுகாப்பற்ற முறையில் இருக்கலாம் எனவும், அது விமானப் போக்குவரத்துக்கு ஆபத்தாக அமையும் எனவும் அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved