Also Watch
Read this
By: Manigandan Raja

பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக ஆற்றில் தங்க வேட்டை
கென்யா நாட்டின் செபோரோர் ((Cheporor)) கிராமத்தில் தங்கம் இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து, பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக தங்க வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். வெஸ்ட் பொகோட் மாவட்ட கிராமத்தில் ஆடு மேய்க்கும் மானசெ லோமச்சார் என்பவர் ஆற்றில் பெண்கள் தங்கம் சலிப்பதை பார்த்து தானும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது 3 கிராம் தங்கக் துகளை கண்டறிந்துள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்கள் மூலம் பரவவே, நூற்றுக்கணக்கான மக்கள் தினமும் வரத் தொடங்கியுள்ளனர். இதையடுத்து, கண்டெடுக்கப்பட்டது நிஜமான தங்கமா எனவும், அங்கு எவ்வளவு தங்கம் புதைந்துள்ளது என்பதை பரிசோதிக்க அரசு மண் மாதிரிகளை சோதனைக்கு அனுப்பி உள்ளது.
கினியா தலைநகரில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை
கினியா நாட்டில் கனமழை காரணமாக குப்பைக் கிடங்கு சரிந்து விழுந்ததில் 30 பேர் உயிரிழந்தனர். தலைநகர் கானாக்ரியில்((Conakry)) விடிய விடிய கனமழை பெய்ததால் அங்குள்ள டார்-எஸ்-சலாம் ((Dar-es-Salam)) குப்பைக் கிடங்கு சரிந்து விழுந்தது.

இதில், அப்பகுதியில் இருந்த வீடுகள் மற்றும் குடிசைகள் குப்பைகளுக்குள் புதைந்ததில் 30 பேர் உயிரிழந்த நிலையில், 22 பேர் காயமடைந்தனர். இவர்களில் பலரும் ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்த ராணுவம் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved