Also Watch
Read this
Posted on: Mar 23, 2026 03:48 PM
By: Manigandan Raja

ஈரான் அளித்த பதில் :
ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், ஹோர்முஸ் நீரிணை காலவரையறை இன்றி மூடப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. மேற்காசியாவில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ள ஈரான் நாடாளுமன்ற தலைவர் முகம்மது பாக்கர் காலிபாப்.
அமெரிக்கா தனது தாக்குதல்களை தொடர்ந்து நடத்த அதன் ராணுவத்துக்கு நிதி உதவி செய்யும் அமெரிக்க நிதி நிறுனங்கள், மிகவும் முக்கியமான கட்டமைப்புகள் உள்ளிட்டவை ஈரானால் சட்டபூர்வ இலக்குகளாக கருதப்பட்டு தாக்கப்படும் என தெரிவித்தார். அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஹோர்முஸ் நீரிணையை திறக்கா விட்டால்.
ஈரானின் கட்டமைப்புகள் தாக்கப்படும் என டிரம்ப் விடுத்த எச்சரிக்கைக்கு ஈரான் பதிலடி அளித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ராணுவ தளங்கள் இருக்கும் அனைத்து வளைகுடா நாடுகளும் தொடர்ந்து தாக்கப்படும் எனவும் ஈரான் எச்சரித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved