Also Watch
Read this
Posted on: Mar 24, 2026 03:21 PM
By: Manigandan Raja

இஷாக் தார் சூசகம் :
பயங்கரவாத அச்சுறுத்தலை வேரறுப்பதில் பாகிஸ்தான் உறுதியாக இருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் தினத்தை ஒட்டி நாட்டு மக்களுக்கு விடுத்த வாழ்த்து செய்தியில், பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதியாக இருப்பதாகவும், இந்த இலக்கை நோக்கியே ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அமைந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ரமலான் பண்டிகையை முன்னிட்டு கடந்த 18ஆம் தேதி முதல் 23ஆம் தேதி நள்ளிரவு வரை பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே தற்காலிக போர்நிறுத்தம் கடைபிடிக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் இந்த அறிக்கை மீண்டும் போர் நீடிக்கும் என்பதையே காட்டுவதாக உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved