Also Watch
Read this
By: Manigandan Raja

இறுதி தவணையாக ரூ.480 கோடி செலுத்தியது
பொருளாதார நெருக்கடியிலும் இந்தியாவிடம் பெற்ற கடனை மாலத்தீவு முழுமையாக திருப்பிச் செலுத்தியுள்ளது. ஆயிரத்து 436 கோடி ரூபாய் கடன் தொகையில், இறுதி தவணையாக 480 கோடி ரூபாயை செலுத்தி கடனை அடைத்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவிடம் பெற்ற கடனை முழுமையாக திருப்பிச் செலுத்தியுள்ளதாக மாலத்தீவு தெரிவித்துள்ளது.
குர்ஸ்க் அணுமின் நிலையத்தை தாக்கிய ட்ரோன்
ரஷ்யாவின் குர்ஸ்க் அணுமின் நிலைய குளிரூட்டும் கோபுரத்தை ட்ரோன் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அணு விபத்து அபாயத்தைத் தவிர்க்க அதிகபட்ச ராணுவ கட்டுப்பாடு அவசியம் என ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது. அணுமின் நிலைய பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து தரப்பினரும் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

வளைகுடா பிராந்தியத்தில் மாபெரும் பாதுகாப்பு ஒப்பந்தம்
சவுதி அரேபியாவுக்கு 48 F-35 ரக போர் விமானங்களை விற்பனை செய்வதற்கான 24 புள்ளி 3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ராணுவ ஒப்பந்தத்திற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்தது. வளைகுடா பிராந்தியத்தில் சவுதி அரேபியாவின் பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்த சாத்தியமான வெளிநாட்டு ராணுவ விற்பனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved